கொடூரமாக கணவனை கொலை செய்த மனைவி..பதறவைக்கும் பின்னணி!!


மனைவி ஒருவர் தனது கணவரை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதான தண்டபாணி திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கீரனூரில் 34 வயதான இவருடைய மனைவி தேவி ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வாழ்ந்து வந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள வடதாரை காமராஜர்புரத்தை சொந்த ஊராக கொண்ட தேவி தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே தள்ளுவண்டியில் கணவருடன் சேர்ந்து பழவியாபாரம் செய்து வந்தவர்கள் தினமும் பழவியாபாரம் முடிந்ததும் இரவு நேரத்தில் மொபட்டில் கீரனூர் சென்று விடுவர். ஆனால் ஒரு சில நாட்கள் தண்டபாணி மட்டும் கீரனூர் செல்லும் நேரத்தில் தேவி மட்டும் தனது தாயாரின் வீடான வடதாரை காமராஜர்புரத்தில் தங்கிக்கொள்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி இரவு தேவி மட்டும் கீரனூர் சென்றுள்ள நிலையில் மறுநாள் பழவியாபாரம் செய்ய தாராபுரத்திற்கு வராமல் 16-ந் தேதி வரை கீரனூரில் தங்கிக்கொண்ட நிலையில் தண்டபாணியின் உறவினர்கள் தேவியிடம் வியாபாரத்திற்கு போகவில்லையா? என கேட்டபோது “எனது கணவர் வெளியூர் சென்றுள்ளார் அவர் வந்த பிறகு தான் போவேன்” என தெரிவித்துள்ளார். ஆனால் தேவி கடந்த 14-ந் தேதி முதல் தனது கணவர் காணவில்லை என கீரனூர் போலீசில் புகார் செய்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் எப்படி திடீரென காணவில்லை என்று புகார் செய்தீர்கள் என கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது தேவி அளித்த பதில் அதிர்ச்சி அடைய செய்தது.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ததாக தேவி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் தேவி. தேவியின் தாயார் வீட்டின் அருகில் வசித்து வரும் 19 வயது உறவினரான பெயிண்டர் அபிஷேக் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அடுத்து இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தது தண்டபாணிக்கு தெரியவந்த நிலையில் அவர் தேவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 14-ந் தேதி இரவு 11 மணிக்கு அபிஷேக்கை கீரனூர் வரவழைத்து அவருடன் தேவி உல்லாசமாக இருந்த போது தண்டபாணி பார்த்து விட்டதால் பதறி போன கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து பிளாஸ்டிக் பையால் தண்டபாணியின் முகத்தை மூடி, கையை கட்டி இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை செய்தனர். பின்னர் உடலை சாக்குமூட்டையில் கட்டி தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலை பழனி பிரிவு அமராவதி ஆற்றின் ஓரம் உள்ள ஒரு கிணற்றில் சாக்குமூட்டையுடன் கல்லையும் சேர்த்து கட்டி போட்டனர். தற்போது போலீசார் தேவி மற்றும் அபிஷேக்கை கைது செய்து கிணற்றில் வீசப்பட்ட தண்டபாணியின் உடலையும் கைப்பற்றியுள்ளனர்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!