மாமியார் மீது ஆசை… மருமகன் செய்த கொடூர சம்பவம்..!


மாமியார் மீதுள்ள ஆசையில் மகளை திருமணம் செய்த மருமகனை ஏமாற்றி விட்டு வேறு திருமணம் செய்ததால், மருமகன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேகர் என்பவர் விழுப்புரம் நகராட்சி எதிரேயுள்ள ராஜகோபால் தெருவில் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. சித்ராவின் கணவர் சேகர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். சித்ராவுக்கு 24 வயதில் கவுசல்யா என்ற மகளும் 22 வயதில் சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.

சேகர் சித்ராவுக்கு 13 வயது இருக்கும் போது அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது சித்ராவுக்கு வயது 39. இந்நிலையில் இவரின் மகள் கவுசல்யாவுக்கு திருமணமாகி விட்டது. கவுசல்யாவின் கணவர் சோனு சர்மா. இவரது மகன் சக்திவேலுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்.

சித்ராவுக்கும் தனது மகள் கவுசல்யாவின் கணவர் சோனு சர்மாவுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.

பாலமுருகன் என்பவர் விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை. இவருக்கு வயது 26. இவருக்கு சித்ராவுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனால் சில நாள்களுக்கு முன் பாலமுருகனை சித்ரா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அதனால், அவரின் கள்ளகாதலன் ஆன சோனு சர்மா ஆத்திரமடைந்துள்ளார். அதனால் அவர் தனது மாமியார் சித்ராவிடம் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, பாலமுருகன் அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது ஆத்திரத்தில் சோனு சர்மா பாலமுருகனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாலமுருகன் பலியானார். பாலமுருகனை வெட்டுவதை தடுக்க முயன்ற சித்ராவுக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

தனது மாமியாரின் இரண்டாவது கணவரை கொலை செய்து விட்டு சோனு சர்மா தப்பி ஓடினார். பின்னர் விழுப்புரம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது அவரிடம் நடத்த பட்ட விசாரணையில் சித்ரா மீதிருந்த மயக்கத்தின் காரணமாக தான் அவரின் மகளை திருமணம் செய்ததாகவும், ஆனால் அவர் தன்னை ஏமாற்றி விட்டு இன்னோருவரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!