கொடிய வியாதி கூட பாபாவின் தரிசனத்தால் குணமாகி விடுகிறது..!


ஸ்ரீ சாயிபாபா அனைவருக்கும் கருணை மயமான அன்னை. கூவி அழைக்கும் போது ஓடிவந்து அணைத்துக் கொள்வார். கொடிய வியாதி கூட அவருடைய தரிசனத்தால் குணமாகி விடுகிறது. ஆகவே, சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்து விடுகிறார். இது அவருடைய உறுதிமொழி. இதற்குக் கட்டுப்பட்டவர் அவர்.

ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும். மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு யோகி அல்லது சன்னியாசியாக மாறினால் தான் இந்த நிலையை தவிர்க்க முடியும்.

அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்கும் பாபாவின் உதவி நமக்குக் கிடைகிறது.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!