மனைவி, குழந்தைகளை கொன்று கணவர் அதிர்ச்சி முடிவு… அதிர வைத்த காரணம்..!


நாகர்கோவில் அருகே மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகேயுள்ள சுண்டபற்றிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(43) மர வேலை செய்யும் தொழிலாளி, இவருக்கு சரஸ்வதி (37) என்ற மனைவியும், அனுஷ்கா (10), என்ற பெண் குழந்தையும், விகாஸ் (4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில், விகாஸுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் கண்ணன் விரக்தி அடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கண்ணனும் அவரது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!