வயிற்றில் குழந்தை இருப்பதாக நாடகம்… பிஞ்சு குழந்தையை கடத்தி சிக்கிய பெண் பகீர் தகவல்..!


பச்சிளம் குழந்தையை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடத்திய இளம்பெண் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டன், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விசூரில் வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவருக்கு வயது 24. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பாக்கியலட்சுமி தனது பிரசவத்திற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

சிலம்பரசன், கடலூர் அடுத்த டி.குமராபுரத்தை சேர்ந்தவர். பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நர்மதா. இவருக்கு வயது 19.

இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் நர்மதா என்ற அந்த பெண் பாக்கியலட்சுமிக்கு பிறந்த பெண் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடத்திச் சென்றுள்ளார்.

தனது குழந்தையை காணாமல் குழந்தையின் தாய் பதறிபோய் உள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் துரிதமாக செயல்பட்டனர். குழந்தையை கடத்தி சென்ற நர்மதாவை புதுச்சேரி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்த கைது செய்தனர்.

நர்மதாவை கைது செய்த போலீசார் அவரை தீவிரமாக விசாரித்தனர். அப்போது நர்மதா: நானும், சிலம்பரசனும் 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தோம். ஆனால் எங்களுக்கு குழந்தை இல்லை. ஒரு முறை கர்ப்பமானேன் ஆனால் கருச்சிதைவு ஏற்பட்டு விட்டது. பின்னர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை கர்ப்பமானேன். அதுவும் கலைந்து விட்டது.

ஆனால் அதை வீட்டில் உள்ளவர்களிடம் நான் தெரிவிக்கவில்லை. எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று யாரும் என்னை சொல்லி விடக்கூடாது என்பதற்காக நான் கர்ப்பமாக இருப்பதாக நடித்து எனது கணவர் உள்பட அனைவரும் நம்பி வைத்தேன்.

5-வது மாத சீர்வரிசை விழா எனக்கு நடத்தபட்டது. அப்போது சிலர் வயிறு பெரிதாக இல்லையே ஏன் என்று கேட்டனர். அப்போது அவர்களிடம் சத்து குறைபாடு இருப்பதாக சமாளித்தேன்.

குடும்பத்தினர் முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காக அடிக்கடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி என் கணவரிடம் பணம் வாங்கி வந்தேன்.

ஆனால், தற்போது 10 மாதம் ஆகிவிட்டது. இந்த நிலையில் எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அதனால் தான் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தி, அதை தன்னுடைய குழந்தை என்று அனைவரையும் நம்ப வைக்க திட்டமிட்டேன்.

திட்டமிட்ட படி பாக்கியலட்சுமி, அவரது மாமியார் ஆகியோரிடம் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக வந்தேன் என்று நம்ப வைத்தேன். பாக்கியலட்சுமி தனியாக இருந்த போது, குழந்தையை மாமியார் வாங்கி வருமாறு கூறியதாக குழந்தையை கடத்தினேன் என்று கூறினார்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!