குளத்தில் மாங்காய் கழுவ சென்ற 3 குழந்தைகளுக்கு நடந்த பரிதாபம்..!


தோட்டத்தில் விழுந்து கிடந்த மாங்காயை கழுவ சென்ற அண்ணன், தம்பி மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஜசீர், கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குனிசேரி பகுதியைச் சேர்ந்தவர். ஜசீர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் ஜின்ஷாத். இவருக்கு வயது 12, இரண்டாவது மகன் ரின்ஷாத். இவருக்கு வயது 7. மூன்றாவது மகன் ரிபாஸ். இவருக்கு வயது 3.

மூத்த மகன் இரண்டு பேர் அரசுப் பள்ளியில் படித்து வந்தனர். ஜின்ஷாத் ஏழாம் வகுப்பு படித்துள்ளார். ரின்ஷாத் மூன்றாம் வகுப்பு படித்துள்ளார்.

இவர்கள் இருக்கும் வீட்டுக்கு அருகே குளம் ஒன்று உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. அதனால், அந்த குளத்தில் தண்ணீர் கூடுதலாக இருந்தது. அந்தக் குளத்தை ஒட்டி மா மரங்கள் நிறைய உள்ளது.

ஜசீரின் மூன்று மகன்கள் மற்றும் அவர்களின் உறவினரான ஒரு சிறுமியும் தோட்டத்திற்கு விளையாட சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்து மாங்காய்கள் கீழே விழுந்து கிடந்துள்ளது.

அந்த மாங்காய்களைச் எல்லாம் இவர்கள் சேகரித்து அதைக் கழுவ குளத்திற்குச் சென்றனர். அங்கு இருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டு ரின்ஷாத் மாங்காய்களை கழுவிக் கொண்டு இருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாக கால் வழுக்கி அந்த சிறுவன் குளத்திற்குள் விழுந்துள்ளான்.

தனது அண்ணன் குளத்தில் விழுந்ததை பார்த்த 3 வயது சிறுவன் ரிபாஸ், அண்ணனைக் காப்பாற்ற முயற்சி செய்துலான். ஆனால் அந்த சிறுவனும் குளத்தில் விழுந்துலான். இதைப் பார்த்த ரின்ஷாத் இருவரையும் காப்பாற்ற குளத்தில் குதித்துள்ளான். ஆனால் பரிதாபமாக அவனும் குளத்தில் மூழ்கினான்.

இவர்கள் 3 பேரும் தண்ணீர் மூழ்குவதை பார்த்த உறவினரான சிறுமி தனது வீட்டிற்கு ஓடிச் சென்று விவரத்தை கூறியுள்ளால். அதனால் பதறிப்போன ஜசீர் மற்றும் அவரது உறவினர்கள் விரைந்து சென்று மூன்று குழந்தையும் மீட்டனர்.

சிகிச்சைக்காக 3 பேரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆலத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!