நள்ளிரவில் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் மர்மமான கோயில் சிலைகள்… எங்கு தெரியுமா..?


உலகில் உள்ள ஒவ்வொரு ஆலயங்களுக்கும் அவற்றிற்கே உரிய தனிச்சிறப்புகள் நிச்சயம் இருக்கும். அவற்றில் சில கேட்பதற்கே சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் சில கோவில்களின் வரலாறு மர்மங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.

அப்படி தன்னுடைய வரலாற்றில் பல மர்மங்களைக் கொண்ட கோயில்களில் ஒன்று தான் ராஜராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி கோவில்.

இந்த கோவில் பிகார் மாநிலத்தில் உள்ள பக்ஸார் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அதன் வரலாறு குறிப்பிடுகிறது.

இக்கோவிலில் வீற்றிருக்கும் அம்மனின் பெயர் தான் ராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி என்பதாகும்.

இந்த கோவிலில் வந்து வழிபட்டுச் செல்பவர்களுக்கு வாழ்வில் பல திருப்பு முனைகள் உண்டாகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வருகிறது.

இந்த கோயிலின் முன்பக்க வாயில், பக்தர்களை வரவேற்கும் படி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படி உள்ள இந்த கோவிலில் இரவு நேரங்களில் மட்டும் பல மர்மமான குரல்கள் ஒலிக்கின்றதன என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

கோவிலில் உள்ள சாமி சிலைகள் தான் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த கோவில் பூசாரிகள், கோவிலின் கருவறையில் இருந்து வரும் இந்த ஒலிகள், தாய் திரிபுர சுந்தரியின் அருள்வாக்கு என்று கூறுகின்றனர்.

பல ஆய்வாளர்களும் இங்கு வந்து தங்கி ஆராய்ச்சி செய்தும் அந்த சத்தம் மனிதர்களுடையதா அல்லது உண்மையிலேயே சிலைகள் தான் பேசிக்கொள்கின்றனவா என்பது அவர்களுக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!