கூடுதலா குருமா கேட்டது தப்பா.. ?அடித்தே கொன்று மிளர வைத்த பரோட்டோ மாஸ்டர்..!


கோவை சூலூர் அருகே பரோட்டா வாங்க சென்ற நபர் கூடுதலாக குருமா கேட்டிருக்கிறார். அப்போது பரோட்டோ மாஸ்டர் தரமறுத்ததுடன் கூடுதல் குருமா கேட்டவரை கடை ஓனருடன் சேர்ந்து அடித்தே கொலை செய்தார். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருக்கும் முத்துகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். நேற்று தனது குழந்தைகளுக்காக பரோட்டா வாங்குவதற்காக கரிகாலன் என்பவரது ஓட்டலுக்கு ஆரோக்கிய ராஜ் சென்றுள்ளார்.

அங்கு பரோட்டாவை பார்சலில் வாங்கிக் கொண்ட ஆரோக்கிய ராஜ, கொஞ்சம் கூடுதலாக குருமா கொடுங்கள் என கடையில் இருந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். அங்கிருந்த பரோட்டா மாஸ்டர் முத்து அதை கொடுக்க மறுத்திருக்கிறார். அப்போது முத்துவுக்கும் ஆரோக்கியராஜ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கரிகாலன் ஆரோக்கியராஜை தவறான வார்த்தைகளால் பேசினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த ஆரோக்கியராஜ் கை ஒங்கி உள்ளார். அப்போது இரு தரப்புக்கும் இடையே கைகலப்பாக மாறி உள்ளது. பரோட்டா மாஸ்டரும், கரிகாலனும் சேர்ந்து ஆரோக்கியராஜை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

படுகாயம் அடைந்த ஆரோக்கியராஜ், அங்கேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

.அங்கு ஆரோக்கியராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜின் உறவினர்கள், பரோட்டா கடை உரிமையாளர் கரிகனாலனை தாக்கினர். அத்துடன் பரோட்டோ மாஸ்டர் முத்துவையும் சரமாரியாக தாக்கினார். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார், உறவினர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்திருந்த பரோட்டா மாஸ்டரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்துடனர் கரிகாலன், பரோட்டோ மாஸ்டர் முத்து ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டோவிற்கு கூடுதல் குருமா கேட்டதற்காக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!