மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்… அதிர வைத்த காரணம்..!


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அலவாய்கரை வாடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 70) இவருக்கு 10 குழந்தைகள்.

7-வது மகளான ராமலட்சுமியை கீழக்கரை அருகே உள்ள இடிஞ்ச கல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு 2 பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பொன்னாம்மாள் மகள் பாதுகாப்புக்காக இரவில் அவருடன் தங்கி வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 2 பேருக்கும் வாய்த்தகராறு முற்றவே பொன்னாம்மாள், மருமகனை தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த முருகன் வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து பொன்னாம்மாளின் இடது பக்க மார்பில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக மூதாட்டி பொன்னம்மாள் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழக்கரை போலீஸ் டி.எஸ்.பி. முருகேசன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தப்பியோடிய மீனவர் முருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!