ஈரோட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பி ஓடிய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேகா வயசு (30). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவரது பெற்றோர்கள் ஈரோடு ஏபிடி ரோடு பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று ரேகா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் ரேகாவின் தாயார் தமிழரசி மற்றும் தம்பி ஜோதிமணி ஆகியோர் இருந்துள்ளனர். பின்னர் இன்று காலை உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தமிழரசி 3 வயது பேரனுடன் வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனியாக ரேகாஇருந்துள்ளார் அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரேகாவின் வீடு எங்கு உள்ளது எனக் கேட்டு வந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த வாலிபர் வீட்டிலிருந்து ரத்தக்கறையுடன் வெளியே வந்துள்ளார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் ரேகா வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு ஈரோடு எஸ் பி தங்கதுரை,ஏடிஎஸ்பி பொன் கார்த்திக்குமார், டிஎஸ்பி ராஜு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. கொலையாளி வந்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து ஏதும் தெரியவில்லை. பட்டப்பகலில்் ஈரோட்டில் இளம் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைை ஏற்படுத்தியுள்ளது.- source: malai.murasu
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!