யாழில் நள்ளிரவில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் நள்ளிரவில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது முள்ளிவாய்க்கால் நினைவு தூண்.

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடிக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டது.

இதனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் பகுதியில் மாணவர்கள் திரண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!