அடிக்கடி கெட்ட கனவு வருதா? அப்ப இந்த பரிகாரத்தை செய்யுங்க..!


இந்த பரிகாரத்தை செய்த மறுதினமே எந்தவித மன கஷ்டமும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களை தழுவும். உடனடியாக பலன் தரக்கூடிய பரிகாரம் இது.

சில பேருக்கு வாழ்வில் ஏற்படும் குழப்பமான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதனாலேயே தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட மன குழப்பத்தினால் இரவில் தூக்கம் சரியாக வராது. இரவில் நன்றாக தூக்கம் வரவில்லை என்றால், பகலில் செய்யும் வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. ஆர்வம் இல்லாமல் செய்யும் எந்த வேலையும் வெற்றியை தொடாது. இப்படி இருக்க, இந்தப் பிரச்சினைக்குச் சுலபமான ஒரு தீர்வு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே கல் உப்புக்கும், எலுமிச்சை பழத்திற்க்கும் கெட்ட சக்தியை ஈர்த்துக் கொள்ளும் சக்தி அதிகமாக உள்ளது என்பதை நம்மில் பலர் அறிவோம். எலுமிச்சை பழம் என்றால் குறிப்பாக அம்மனுக்கு மிகவும் உகந்தது. முடிந்தவரை உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இருந்தால், அது எந்த அம்மனாக இருந்தாலும் சரி. அந்த குலதெய்வத்தின் மடியில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய மனக் குழப்பங்கள் அனைத்தும் தீர வேண்டும். நிம்மதியான தூக்கம் வேண்டும். மன அமைதி வேண்டும் என்றவாறு வேண்டிக்கொண்டு, அந்த எலுமிச்சம் பழத்தை அர்ச்சனை செய்து பெண்களாக இருந்தால் உங்கள் முந்தானையில் அந்த பழத்தை வாங்கவேண்டும். ஆண்களாக இருந்தால் மேலே போடும் அங்கவஸ்திரம் துணியில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய குலதெய்வம் அம்மனாக இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு சென்று இப்படி செய்து வரலாம். வாங்கிய எலுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமை செய்தால் நல்ல பலன் உண்டு. அன்று சுத்தபத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அசைவம் சாப்பிடக்கூடாது. பூஜை அறையில் எலுமிச்சை பழத்தை தரையில் படும்படி வைக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் கைநழுவி அந்த எலுமிச்சை பழத்தை தரையில் விட்டுவிடக்கூடாது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!