வீடு புகுந்து 3 பேர் மீது துப்பாகிச்சூடு – 2 சிறுமிகள் கடத்தல்.. கொள்ளையர்கள் அட்டூழியம்..!


உத்தரபிரதேசம் லக்னோவில் வீடு புகுந்து 3 பேர் மீது துப்பாகிச்சூடு நடத்தி 2 சிறுமிகளை கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சின்ஹாட்டில் வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் திடீரென குடும்ப உறுப்பினர்கள் மீது துப்பாகிச்சூடு நடத்தி உள்ளனர். அதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். வீட்டில் இருந்த 2 சிறுமிகளையும் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!