10 ஆண்டுகளாக குழந்தை இல்லை.. போலீஸ் தம்பதி விபரீத முடிவு..!


பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஷீலா. இவர்கள் 2 பேரும் போலீஸ். பெங்களூரு வடகிழக்கு மண்டலத்தில் உள்ள சம்பிகேஹள்ளி உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எழுத்தாளராக சுரேஷ் பணியாற்றி வந்தார்.

இதுபோல பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஷீலா பணியாற்றினார். இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் சுரேசும், ஷீலாவும் மனவருத்தத்தில் இருந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி ஆனபோதிலும் சுரேசின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் சுரேசின் வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து ஜன்னல் வழியாக அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது சுரேசும், ஷீலாவும் தூக்கில் பிணமாக தொங்கினார்.போலீசார் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆனபோதிலும் குழந்தை இல்லாத காரணத்தால் சுரேசும், ஷீலாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!