பெண் டிஎஸ்பி விபரீத முடிவு.. நண்பர்கள் 4 பேர் அதிரடி கைது !


கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூர் அடுத்துள்ள குருபாலஹட்டி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (32). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் 2014ஆம் ஆண்டு பிரிவில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார்.

இவர் கல்லூரியில் தன்னுடன் படித்த நவீன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் தனியாக வசித்துவந்த நிலையில், தற்போது சி.ஐ.டி பிரிவில் டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், லட்சுமி நாகர்பாவி மெயின் ரோடு பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் நேற்று விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது லட்சுமி வீட்டின் தனி அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் கதவை தட்டியும், அவரது செல்போனுக்கு கால் செய்து பார்த்தும் பலன் அளிக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கிருந்த ஜன்னல் கம்பியில் லட்சுமி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக லட்சுமியின் தந்தையும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமானவர் கொடுத்த புகாரின் பேரில் நண்பர் மனோகர் மற்றும் பிரஜ்வல் உள்பட 4 பேரை அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் தற்கொலைக்கான காரணம குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்ப பிரச்னையா, உயரதிகாரிகள் அழுத்தமா அல்லது நண்பர்களுடன் விருந்தில் மது அருந்தும் போது பிரச்னை உண்டானதா என பல்வேறு காரணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!