தாடையிலும், மார்பு பகுதியிலும் காயம் இருந்தது .! சித்ரா தாய் மாமா கூறிய திடுக் தகவல்கள்.!


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்றும் , சித்ராவின் முகத்தில் இருந்த ரத்த காயம் அவரது நகக்கீறல்கள் தான் என்றும்,கணவர் மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் தற்கொலைக்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்திருந்தது .


ஆனால் சித்ராவின் நண்பர்கள், குடும்பத்தினர் என பலர் சித்ரா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று கூறி வருகின்றனர்.இதனை தொடர்ந்து போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவின் தாய் மாமனான சுரேஷ் அவரது மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.அதாவது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டால் கழுத்தில் காயம் இருக்க வேண்டும்.ஆனால் அப்படி எதுவுமில்லை.அதே நேரத்தில் அவரது தாடை ,கழுத்து மற்றும் மார்பு பகுதியிலும் அடிப்பட்டு காயம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.மேலும் சித்ரா ஒரு தைரியமான பெண் , அப்படிப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை.எனவே அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் , அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இவரது இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: cinebar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!