பெற்ற குழந்தையை காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற நிறைமாத கர்ப்பிணி பெண்!


லண்டனில் 2 வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த நிறைமாத கர்ப்பிணி தாய் தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து கைதான நிலையில் தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Phylesia Shirley (23) என்ற பெண்ணின் மகன் Kyrell Matthews (2).

கடந்தாண்டு அக்டோபர் மாதம் Kyrell-ஐ தனது முன்னாள் காதலன் Kemar Brown (27) உடன் சேர்ந்து கடுமையாக தாக்கி கொன்றுள்ளார் Phylesia.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் கிடந்த Kyrell பின்னர் உயிரிழந்துள்ளான்.

பிரேத பரிசோதனையில் அவன் விலா எலும்புகள் முறிந்துள்ளது தெரியவந்ததோடு, கடுமையான தாக்குதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதும் தெரிந்தது.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக Phylesiaக்கு அடுத்தமாதம் குழந்தை பிறக்கவுள்ளது.

அவரும், Kemarம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இருவரையும் ரிமாண்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!