சொந்த மகளாகவே நடத்தினோம்.. மகன் மீது அபாண்டமாக பழி.. ஹேம்நாத் பெற்றோர்..!

சின்னத்திரை நடிகர் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஹேம்நாத் என்பவருடன் பதிவு திருமணம் நடந்த நிலையில், அவர்தான் சித்ராவை அடித்துக்கொன்று விட்டார் என சித்ராவின் தாயார் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து இன்று சித்ராவின் உடலானது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பேசிய காவல்துறையினர் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால்தான் இறந்தார் எனக்கூறினர்.


‘ சித்ராவின் இறப்பு பேரிழப்பு. அவர் ஏன் இப்படி செய்தார் எனத் தெரியவில்லை. எங்கள் மகன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. ஹேம் நாத் மீது மொத்தப் பழியும் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் சித்ராவின் இறப்பிற்கு அவர் காரணம் இல்லை.

அவர்களிடம் நாங்கள் எந்த வரதட்சணையும் கேட்க வில்லை. மருமகளாக வந்தால் போதும் என இருந்தோம் வேறு எதுவும் கேட்கவில்லை. ஹேம் நாத் வெளியே சென்றால் எப்போதுதாவது குடிப்பது உண்டு. எனது மகனை கொலை காரன் என்று கூறுவதை தாங்க முடியவில்லை. கொலை செய்யவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது ஆறுதலாக இருக்கிறது. சித்ரா மரணம் குறித்து உண்மை வெளிவர முழு ஒத்துழைப்பு கொடுப்போம்’ என்றனர்.- source: puthiya.thalaimurai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!