நடிகை சித்ரா மரணத்துக்கு இவர்கள் தான் காரணம்!! காவல்துறை திடுக்கிடும் தகவல்


நடிகை சித்ரா மரணத்துக்கு அவரது கணவரும், தாயாரும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய சித்ரா ஜெயா டிவி, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அடுத்த சில மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் இடையே பதிவு திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிது.


இந்நிலையில் சென்னையை அடுத்த நசரத் பேட்டையில் தனியார் விடுதியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது இந்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவரும் நிலையில், சித்ரா தற்கொலைக்கு கணவர் , தாயார் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே முக்கிய காரணம் தெரிவித்துள்ளனர்.

சித்ராவின் கணவர் ஹேம்நாத் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சித்ராவிடம் ஏற்கனவே சண்டையிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹேம்நாத் குடித்துவிட்டு அடிக்கடி பிரச்னை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


சித்ராவின் தாயார் விஜயா , ஹேம்நாத்தை பிரிந்து வர சொல்லி தொடர்ந்து கூறி வந்ததாலும் சித்ரா மன உளைச்சலுக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சித்ராவின் செல்போனில் உள்ள ஆதாரங்கள், குருஞ்செய்திகள் அழிக்கப்பட்டு உள்ளதாக செல்போன் ஆய்விற்கு அனுப்பட்டுள்ளது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!