சித்ராவின் மர்ம மரணத்துக்கு யார் காரணம்?: அமைச்சரின் கார் வந்து சென்றது ஏன்?


சின்னத்திரை நடிகை மர்மமான முறையில் மரணம் அடைந்து 2 நாள் ஆன நிலையில், அவரது மரணம் குறித்த மர்மம் விலகாமல் உள்ளது. அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு ஒரு அமைச்சரின் கார் வந்து சென்ற தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (28). இவர் 2013-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். மேலும், டிவி தொடர்களிலும், விளம்பரப் படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.


இதற்கிடையில் ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது தமிழக அமைச்சர் ஒருவரின் கார் வந்து சென்றுள்ளது. அவர் எதற்காக நள்ளிரவில் ஓட்டலுக்கு வந்தார்? அது யாருடைய கார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பு எம்ஜிஆர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு செல்வாக்கான அமைச்சர்தான் அடிக்கடி நடிகைகளுடன் புறநகரில் உள்ள ஓட்டலில் தங்கும் பழக்கம் உள்ளவர். அவர் வேறு நடிகைகளுடன் ஓட்டலுக்கு வந்தாரா? வேறு அமைச்சர்கள் யாராவது வந்தார்களா? எதற்காக வந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சித்ரா உயிரிழந்து 2 நாட்களாகியும் மர்மம் விலகாததால், சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.- source: tamilmurasu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!