கஜகஸ்தான் பேருந்து தீ விபத்தில் 52 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி..!


ரஷ்யாவின் சமரா நகரில் இருந்து கஜகஸ்தானில் உள்ள ஹிம்கென்ட் என்ற நகருக்கு பேருந்து ஒன்று 55 பயணிகள், ஊழியர்கள் 2 பேருடன் சேர்த்து 57 பேர்களுடன்சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் இருந்து தீ குபு குபுவென எரிய தொடங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 52 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ காயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்திற்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் அனைவரும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த பயங்கர தீ விபத்து இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!