ஹேமந்த் பத்தி எனக்கு ஏற்கனவே தெரியும்’ – உண்மைகளை வெளியிட்ட சூர்யா தேவி!


சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பலரையும் பாதித்துள்ளது என்றே சொல்லலாம். அவரது ரசிகர்களும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் வருகின்றனர். இந்நிலையில் சூர்யாதேவி சித்ராவின் இந்த இறப்பை பற்றி கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து அதிக ரசிகர்களையும் தன் பக்கம் வைத்திருக்கும் சித்ராவின் இந்த கொடூர மரணம் பலரையும் வெகுவாக காயப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இது தற்கொலை அல்ல கொலை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். இன்னும் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவரவும் இல்லை.

இந்த சாவில் உள்ள மர்மத்தை அறிவதற்காக போலீசாரும் தீரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பொழுது வனிதாவின் பரம எதிரியான சூர்யா தேவி சித்ராவின் மரணத்தை பற்றி பேசியுள்ளார். அதாவது அவருக்கு ஹேமந்த்தை ஏற்கனவே தெரியுமாம். அவரது நிச்சயதார்த்தத்திற்கு கூட வாழ்த்து தெரிவித்தாராம்.

அவர் அந்த அளவிற்கு நல்லவனும் கிடையாது. அப்போவே நெனச்சேன் இப்படி பட்ட நல்ல பொண்ணுக்கு இவனானு? அப்போ நான் எதுவும் பெருசா எடுத்துக்கல. ஆனா இதெல்லாம் வச்சு பாக்கும்போது இது கண்டிப்பா தற்கொலை கிடையாது. தற்கொலை பண்ற அளவுக்கு அவ கிடையாது. அப்படி தற்கொலை பண்ணி இருந்தாலும் அதுக்கும் இவன் தான் காரணமாக இருப்பான்.

அவனை சும்மாவே விட கூடாது. அந்த கடவுள் தான் போலீஸ் ரூபத்துல வந்து இவனுக்கு தண்டனை வாங்கி தரணும். இவன் போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சாலும் கடவுள் இவனுக்கு நல்ல தண்டனை தருவார். அவளை நிச்சயம் பண்ணதுக்கு அப்பறம் தான நீயே ஹீரோ. பிரபலத்துக்காக தானா அவளை கல்யாணம் பண்ண பாத்த. நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட. இவ்வாறு கூறி விடியோவை வெளியிட்டுள்ளார் சூர்யா தேவி. இந்த விடியோவை பார்த்த பலரும் ஹேமந்த்தை திட்டி வருகின்றனர்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!