நடிகை சித்ரா மரணத்தில் சந்தேகம்… விசாரணை வளையத்தில் கணவர்!


நடிகை சித்ரா மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரது கணவர் மற்றும் சக நடிகர், நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தால் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர். சித்ரா தற்கொலை செய்து கொள்ளக்கூடிய பெண்ணே அல்ல என்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் கூறுகின்றனர். மேலும் அவர் கழுத்தில் எந்த தடயமும் இல்லாததால் மரணத்தில் சந்தேகம் வலுத்துள்ளது.

அவர் கணவர் ஹேமந்த் உடன் இருந்த போது உயிரிழந்துள்ளார். அதனால் நேற்று இரவு வரை நசரத் பேட்டை போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இன்று மீண்டும் ஆஜராகும்படி கூறியுள்ளனர்.

அதே போல் சித்ரா தொலைபேசியில் பேசியவர்களுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சித்ராவின் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர், சக நடிகர்கள் என அனைவரையும் காவல்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் சித்ரா மரணம் தொடர்பான வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!