நடிகை சித்ரா மரணம் தற்கொலையா..? கொலையா..? பகீர் கிளப்பும் தடயவியல் நிபுணர்!


நடிகை சித்ரா மரணம் தற்கொலை அல்ல, அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என பெங்களூருவை சேர்ந்த தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக பயணத்தை தொடங்கிய சித்ரா ஜெயா டிவி, சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அடுத்த சில மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் இடையே பதிவு திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிது.

இந்நிலையில் சென்னையை அடுத்த நசரத் பேட்டையில் தனியார் விடுதியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த போது இந்த விபரீதி முடிவை எடுத்துள்ளார். அதிகாலை படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பிய பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


ஆனால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தடவியல் நிபுணர் தினேஷ் ராவ் சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

சித்ராவின் புகைப்படத்தை ஆய்வு செய்த அவர் அவரது முகத்தில் இடது பக்கத்தில் நகக்கீறல்கள் ஏற்பட்டது எப்படி, தற்கொலை என்றால் கழுத்தில் அடையாளம் இல்லையே போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். கண் ,மூக்கு, வாய் பகுதியில் காயங்கள் இருந்தால் அது கொலை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!