துன்பங்கள் படிப்படியாக குறைய மிதுன ராசிக்காரருக்கான பெருமாள் துதி


மிதுன ராசிக்காரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பெருமாள் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று !

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவு மொன்றாய் இசைந்து- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!