சித்ரா திடீர் மரணம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உருக்கமான பதிவு!!


பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடிகையாகவும் தன்னை மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்ட சித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த தொடர் மூலம் தனது கதாபாத்திரமான முல்லைக்கு வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தற்போது அவருடைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் துணையான குமரன், சித்ராவின் மரணத்திற்கு இரங்கல் பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது “உன்னுடைய துணிச்சலான குணத்திற்கு தான் நீ பெயர் பெற்றவள். பல பெண்களுக்கு நீ ஒரு உத்வேகமாக இருந்தாய். நீ திரும்ப போராடியிருக்க வேண்டும். இது பதில் அல்ல. இது எப்போதுமே அதற்கு பதில் அல்ல” என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.- source: thandoratimes

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!