சிறுமியின் உயிரைப் பறித்த பட்டாசு… வெடித்து சிதறி பலியான சோகம்..!


கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள வரம்பனூர் கிராமத்தை சேர்ந்த சரவணன்-அஞ்சலையம்மாள் தம்பதிக்கு 5 வயதான கார்த்திகா என்ற மகள் ஒருவர் இருந்து உள்ளார்.

சரவணன் வெளிநாட்டில் பணிபுரிவதால் அஞ்சலையம்மாள் தனது மகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்து உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அஞ்சலையம்மாள் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வயல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது அந்த குழந்தை தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை எடுத்து அதில் உள்ள கலர் மத்தாப்பு தீக்குச்சியை பற்ற வைத்து உள்ளது.

அப்போது அந்த தீக்குச்சியில் இருந்த தீ கீழே இருந்த மற்ற பட்டாசுகள் மீது பட்டு தீப்பிடிக்க தொடங்கி உள்ளது. அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அந்த குழந்தையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை கார்த்திகை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனை அடுத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.- source: yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!