பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 53.
1998-ல் வோஹ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா – லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிப் பஸ்ரா தற்கொலை குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். ஆசிப் பஸ்ராவின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இவர் கடந்த 5 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும், அவருடன் ஒரு வெளிநாட்டை சேர்ந்த காதலி ஒருவர் அவருடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.- source: dailythanthi
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!