வனிதாவை விளாசிய சகோதரி ஸ்ரீதேவி..!


பிக் பாஸ் மூலம் அறிமுகமான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்ததால் பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. மேலும் இவர்களுக்கு இடையே பிரேக்கப் ஆனதும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவியது. இதுவரையிலும் எதுவும் வாய்திறக்காமல் இருந்த வனிதாவின் இளைய சகோதரி ஸ்ரீதேவி வனிதா பற்றி பேட்டியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகுமாரின் மகளான வனிதா சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வீட்டை விட்டு பிரிந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள். அதில் மூத்த மகள் தான் வனிதா. விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஒத்து போகாததால் விவாகரத்தும் பெற்றனர். ஆனால் வனிதா மகனை தன்னுடன் தான் வைத்துக்கொள்ள வேண்டும் என கோர்ட்டில் கேஸ் போட்டு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனால் அவரது மகன் ஸ்ரீஹரி தந்தையிடம் தான் இருப்பேன் என்று கூறியதால் ஆகாஷ்க்கு சாதகமாக கேஸ் திரும்பியது.

பின்பு பல நாட்களாக அமைதியாக இருந்த வனிதா பிக் பாஸில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலம் ஆனார். அதன் பிறகு தனக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்து பீட்டர் பால் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. தற்போது அவர்கள் பிரேக்கப் பற்றி தான் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

மேலும் இதுவரையிலும் வினிதாவிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத மாதிரி இருந்த விஜயகுமார் குடும்பத்தில் இருந்து தற்போது வனிதாவை பற்றி கூறியுள்ளனர். அதாவது அவரின் இளைய மகளாகிய ஸ்ரீதேவி வனிதா பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் வீட்டில் கடைக்குட்டி என்பதால் என்னை அம்மா போல வனிதா பார்த்துக் கொண்டாள். இதனால் அவள் மீது நான் மிகுந்த பாசத்தோடு இருந்தேன்.

ஆனால் நான் எப்பொழுது படத்தில் நடித்து அந்த படம் ஹிட் கொடுத்ததோ அப்பொழுதே அவளின் நிஜ சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. என்னையும் ப்ரீத்தியும் பற்றி தப்பு தப்பாக வெளியில் சொல்ல ஆரம்பித்தாள். அதனாலேயே நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. இப்பொழுது வாழ்க்கை துணை வேண்டும் என்று திருமணம் செய்துகொண்டாள். அது முறிந்தும் போய்விட்டது. ‘புடவைய மாத்துற மாதிரி, புருஷன மாத்துறா’ என விளாசி உள்ளார். இனிமேலாவது அந்த பெண் குழந்தை வாழ்க்கைக்காக அமைதியாக இருந்தா நல்லா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.- source: daily.tamilnadu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!