நீங்க இந்த தானங்களை செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்..!


செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமண தடை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தானங்களை முழு மனதுடன் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும். இதை முழு மனதோடு, நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம்.

வாழைப்பூத் தானம்:

ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து தந்து விட வேண்டும்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!