செல்வம் பெருக… இந்த 4 விஷயத்த செஞ்சாலே போதும்..!


நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை இருக்கும். சிலர் இதெல்லாம் கட்டுக்கதை என்று சொல்வார்கள். ஆனால் அவர்களும் கூட வாஸ்து பார்க்காமல் எதையும் செய்வதில்லை. முதலீடு செய்து வீடு கட்டும்போது வாஸ்து பார்க்காமல் எதையும் செய்வதில்லை.

புது வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல. நாம் வசிக்கும் வீட்டைக்கூட வாஸ்துப்படி மாற்றி அமைத்தால் வீட்டில் செல்வமும் வளமும் நிலைத்து நிற்கும்.

வீட்டில் கடிகாரத்தை சரியான திசையில் வைக்கும் போது நேர்மறை ஆற்றல்கள் உண்டாகும். தெற்கு பகுதியில் உள்ள சுவரில் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு பகுதி யமதர்மராஜனின் திசையாகும்.

வீட்டில் தொங்கவிடப்படும் கண்ணாடி சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்க வேண்டும், அதேபோல் கண்ணாடியை வடக்கு கிழக்கு திசையில் வைப்பதே நல்லது.

வீட்டின் படுக்கையறையில் குதிரைகள் ஓடும் ஓவியத்தை வைத்தால் செல்வம் பெருகும், ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்கவிட வேண்டும், சமையலறை மற்றும் குளியலறையை நோக்கி வைக்ககூடாது.

மணி பிளாண்ட் செடியை வீட்டின் வடக்கு- கிழக்கு திசையை நோக்கி வளர்ப்பதும் செல்வத்தை அதிகரிக்கும்.– Source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!