மகாராஷ்டிராவில் கார் மீது டிராக்டர் மோதல் – 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலி..!


மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் மீது டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 மல்யுத்த வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். ஆந்த் கிராமத்தில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு விட்டு, வீரர்கள் காரில் திரும்பி கொண்டிருந்தபோது கடேகான்-சங்லி சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: tamil.webdunia

* உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!