பிறந்த குழந்தையால் வந்த விபரீதம்.. கள்ளக்காதலனை ஏவி கணவரை போட்டு தள்ளிய மனைவி!


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலையை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பாலமுருகன் பெங்களூருவில் கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததால், மனைவியை கிராமத்திலேயே தங்க வைத்துத்துள்ளார். இதனால் அவ்வப்போது ஊருக்கு வருவது வழக்கமாக கொண்டுள்ளார் பாலமுருகன்.

இதனிடையே 8 மாதங்களுக்கு முன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மணிமேகலைக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்ததும், தன்னைப்போல் இல்லை எனவும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் போல் இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார் பாலமுருகன். பின்னர் அவர் ஊர் பக்கமே வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாலமுருகனின் சகோதரியின் கணவர் கோவிந்தராஜு, மைத்துனரை காணவில்லை என திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் மனைவி மணிமேகலையிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கிராமத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, மணிமேகலைக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மணிகண்டனை காவல் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளக்காதலன் மணிகண்டன் கூறிய சம்பத்தால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை தன்னை போல இல்லை என்று மனைவியிடம் சண்டையிட்டு பாலமுருகன் சென்றவுடன், மணிமேகலை தனக்கு போன் செய்து, கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிவிட்டதாக கூறினார். இதற்கு மேல் விட்டால் ஆபத்து என மணிமேகலை கூறியதால், வீட்டுக்குள் இருந்த பாலமுருகனை, பித்தளை குடத்தாலும், சுத்தியாலும் கடுமையாக தாக்கினேன். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மணிகண்டன் தெரிவித்தார்.

இதனையடுத்து, சகோதரர் தனசேகர் உதவியுடன், இருசக்கர வாகனத்தை எடுத்து சென்று சடலத்தை சாக்கு பையில் கட்டி அதிகாலையில் சுடுகாட்டிற்கு எடுத்து சென்றோம். பின்னர் பாலமுருகன் உடலை எரித்து, பின்னர் சாம்பலை அருகில் உள்ள ஆற்றில் கரைத்து விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார் மணிகண்டன்.

விசாரணைக்கு பிறகு, மணிகண்டன் அவரது சகோதரர் தனசேகர், பாலமுருகன் மனைவி மணிமேகலை ஆகிய மூவரை திருநாவலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்று எரித்துவிட்டு காணவில்லை என மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: murasu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!