கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!


முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரத்தின் வீட்டில் இன்று காலையிலிருந்தே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில், இன்று காலை 7.30 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கார்த்திக் சிதம்பரத்தின் மீது பண மோசடி வழக்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!