இந்த ஐபிஎல் கோப்பையை வெல்ல ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு – பிரெட் லீ


ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் என்ற நிலையில், இந்த முறை ஒரேயொரு அணிதான் என பிரெட் லீ தெரிவித்துள்ளார்.ஆனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘ஐக்கிய அரபு அமீரகம் சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும். இதனால் அந்த அணிக்குத்தான் வாய்ப்பு. அவர்களுடைய பலமே, வீரர்கள் முதிர்ச்சி அடைந்தவர்களாகவும், வயதானவர்களாகவும் இருப்பதுதான். இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். என்றாலும் அவர்களை சுற்றி நீண்ட காலம் விளையாடிய வீரர்கள் வளம் வருகிறார்கள். இது அவர்களுடைய மிகப்பெரிய பலம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடுத்த இரண்டு மூன்று வாரங்களின் வானிலையை நான் பார்த்த வரைக்கும் 40 டிகிரி வரை இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் ஆடுகளம் உறுதியாக டர்ன் ஆகும் வகையில் இருக்கும். இது சென்னை அணிக்கு மற்றொரு ஹோம் போன்று இருக்கும் என உணர்கிறேன். அவர்களுடைய அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களும் பந்தை டர்ன் செய்வார்கள். அவர்களுக்கு இந்த தொடர் மிகவும் சரியானதாக இருக்கும். அவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது’’ என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!