18 வகையான கொரோனா மூலிகை பொருட்களை திருடிய திருடன்..!


மதுரையில் கொரோனா பரவலைத் தடுக்க 18 வகையான மூலிகை பொருட்களை திருடியதாக கைதானவர் வாக்குமூலம் அளித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியிலுள்ள கடையின் பூட்டை உடைத்து, 5 ஆயிரம் ரூபாயை திருடிய திருடன், கடையில் இருந்த 18 வகையான மூலிகை பொருட்களையும் திருடி உள்ளார். திருடிய பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த திருடனைப் பிடித்து போலீசார் விசாரித்ததில் கடையில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

திருட்டில் ஈடுபட்டவர் பாலமேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. மேலும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவே 18 வகையான மூலிகை மருந்துகளை திருடியதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!