சொந்த மாமனாருக்கு மருமகள் செய்த வெறிச்செயல்….!


அரியலூரில் சொத்துக்காக சொந்த மாமனாரையே கொலை செய்துள்ள சமபவம் அரங்கேறியுள்ளது. இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்கசாமி என்பவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே காவேரி பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு 3 மகன்கள். இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மூத்த மகன் ராமலிங்கம் இறந்துவிட்டதால். 2 ஏக்கர் நிலத்தை ராமாலிங்கத்தின் மனைவி ராணி எனபவருக்கு பாகம் பிரித்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ராணிக்கு பாகம் பிரித்துக் கொடுத்த நிலத்தை, ராணியின் பெயரில் மாற்றி தர வேண்டும் என்று தங்கசாமியிடம் ராணி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரத்தில் மாமனார் தங்கசாமிக்கும் மருமகள் ராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கசாமி அவரது கொட்டகையில் படுத்திருந்தபோது அங்கு வந்த ராணி அருகில் இருந்த கட்டையை எடுத்து தங்கசாமியை பலமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தகசாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமான உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து செந்துறை போலீசாருக்கு இந்த சமபவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டு மருமகள் ராணியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!