அமெரிக்காவில் தூக்கமின்மையால் எத்தனை குழந்தைகள் உயிரிழக்கின்றனர் தெரியுமா..?


அமெரிக்காவில் தூக்கமின்மையால் ஆண்டுதோறும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 3,500 என கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 1990களில் அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட பாதுகாப்பான தூக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தினால் தூக்கமின்மையினால் ஏற்படும் இறப்புகள் சற்றே சரிவைக் கண்டன.

ஆனால் 90களின் கடைசியில் அந்த சரிவு மந்தமாகி குழந்தைகளுக்கான ஆபத்து மீண்டும் தொடர்கிறது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 201-5ல் மேற்கொண்ட கர்ப்பகால அபாய மதிப்பீட்டுக் கண்காணிப்பு ஆய்வறிக்கையின்படி தாய்மார்கள் உறங்கும் நிலையே பாதுகாப்பற்றதாக இருப்பதாக கண்டறியப்பட்டது.


இத்தகைய தாய்மார்கள் எந்தப் படுக்கையையும் பகிர்ந்துகொள்வது, மென்மையான படுக்கை பயன்படுத்துவது போன்றவை இதற்கான காரணங்கள் எனக் கூறப்படுகிறது.

பாதுகாப்பற்ற தூக்கம் என்பது, குழந்தை தந்தையிடத்திலோ அல்லது தாயிடத்திலோ அல்லது அவர்களது வயிற்றுப்பகுதியை ஒட்டி உறங்குவதைக் குறிக்கிறது.

மென்மையான படுக்கைகளில் தலையணைகள், போர்வைகள், மரத் தொட்டில்கள், அடைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் தூங்கும் நிலைப்பாடுகள் ஆகியவை அடங்கும்.

பாதிக்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு படுக்கையை பகிர்ந்துகொள்வதும், 5க்கு 2 தாய்மார்கள் 38.5 சதவீதம் குழந்தைகள் படுக்கும் இடத்தில் மட்டும்மென்மையான படுக்கையை அமைத்துக்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.-Source: tamil.thehindu

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!