‘மணமேடையில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண்’.. ‘இறுதியில் நேர்ந்த சோகம்’.. ‘கதறும் மணமகன்’


உத்தர பிரதேசத்தை சேர்ந்த சஞ்சய் என்ற நபருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

அதில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் மணமேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது மணமகள் வினிதா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு இரவு முழுவதும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், நேற்று அதிகாலை வினிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதானல் மணமகன் சஞ்சய் கதறி அழுதார். இதனை அடுத்து வினிதாவின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் நுரையீரல் தொற்று பாதிப்பால் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து உறவினர்கள் முன்னிலையில் வினிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!