இரட்டை பெண் குழந்தைகளை வீட்டிற்குள் அழைத்து சென்று இளைஞரின் வெறிச்செயல்..!


தமிழகத்தில் கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடார்ந்து அரங்கேறி வருகின்றன.

அரசு சார்பில் இந்த குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சில கொடூரன்கள் அடங்கியபாடில்லை. அவ்வ்கையில் திருப்பூரில் இரட்டை பெண் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் உள்ள சேவூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், அதே பகுதியில் உள்ள இரட்டை பெண் குழந்தைகளை அழைத்து மிட்டாய் வாங்கி தருவதாக கூறி, தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை அடுத்து இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர், உடனடியாக இதுகுறித்து அவினாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.-Source: yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!