வீட்டை விட்டு வெளியே சென்ற பள்ளி மாணவி… தேடி சென்ற தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா என்ற 17 வயது பள்ளி மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் அங்கு கிரேடு முறையில் நடத்தப்படும் தேர்விற்காக கடந்த ஞயாற்றுகிழமை அன்று இரவு முழுவதும் படித்துள்ளார்.

அதன் பிறகு அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதற்கு பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சனாவின் தாயார் அவரை தேடி அலைந்துள்ளார்.

அப்போது அங்கு வீட்டிற்குள் அருகில் உள்ள கிணற்றில் அஞ்சனா சடலமாக மிதந்துள்ளர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஞ்சனாவின் தாயார் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், மாணவி கடந்த 5 நாட்களாகவே யாரிடமும் பேசாமல் இருந்தார் என்றும் நாங்கள் கேட்டும் எதுவும் கூறவில்லை என்றும் அவரது தாயார் கூறியுள்ளார்.-Source: yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!