கட்டிப்போட்டு காதில் பூச்சி மருந்தை ஊற்றி… ஆத்திரத்தில் மனைவி, மகன் ,தாய் செய்த கொடூரம்!


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயகொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் கூலி வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜசேகர் தற்கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். அதன் பிறகு இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, வீட்டில் உள்ள மனைவி, மகன் மற்றும் தனது தாய் ஆகியோருடன் தகராறு செய்து உள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த மனைவி, மகன் மற்றும் தாய் ஆகிய மூவரும் சேர்ந்து ராஜசேகரை கட்டிப்போட்டு காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்து உள்ளனர்.
இதனை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராஜசேகரின் மனைவி சுகுணா, தாய் செல்வி மற்றும் மகன் ரவிவர்மன் ஆகிய மூவரையும் கைதுசெய்தனர்.-Source: yugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!