அறிவு, பலம், புகழ், தைர்யம் தரும் சாயி நாமம்


அறிவு, பலம், புகழ், தைர்யம், பயமற்ற தன்மை, முழுமையான ஆரோக்யம், கூர்மையான புத்தி புலன்கள் மற்றும் பேசும் திறன் ஆகியவை சாயிநாம ஜபத்தினால் கிடைக்கப் பெறுகிறது. தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி சாயி நாம ஜபத்தில் ஈடுபடுங்கள். இல்லையேல் நேரம் கிடைக்கும் போது சாயி நாம ஜபம் செய்யுங்கள். சாயி நாம ஜபத்தின் பலனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

‘புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வமரோகதா!
அஜாட்யம் வாக்படுத்வம் ஸாயீஸ ஸ்மாரணத்பவேத்’

நான் உடல் இல்லை. நான் இறப்பதில்லை. நானே எல்லாம். எப்பொழுதும் என்னை பாருங்கள். எங்கெல்லாம் பக்தன் என்னை நினைக்கிறானோ, அங்கெல்லாம் அவனைக் காப்பாற்ற நான் அங்கு நிற்பேன்.

‘நாஹம் தேஹோ நமே ம்ருத்யு : ஸர்போகும் பச்ய மாம்ஸதா
பக்தோ மாம்ஸ்மரதே யந்ரதத்ர திஷ்டாமி ரக்ஷிதம்’.


நீ என்ன செய்து கொண்டிருந்தாலும் எல்லா நேரங்களிலும் என்னையே நினைவில் வை. உன்னுடைய மனமும், புத்தியும் என்னிடம் சரணடைந்ததும் நீ சந்தேகமில்லாமல் என்னை அடைவாய் என பாபா கூறுகிறார்,

‘தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர கர்மஸு
மய் அர்ப்பித மனோ புத்திர மாமே வைஷ்யஸ்ய கர்மஸூ சம்ஸயம்’

சாயி நாமம் எல்லா பாவங்களையும் அகற்றிவிடும். அந்த நாமத்தினை உச்சரிப்பதால் பாபாவிடம் மனம் திரும்பி விடுகிறது.தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி சாயி நாம ஜபத்தில் ஈடுபடுங்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் இதுவே ஒரே தீர்வு. சாயி நாம ஜபத்தின் பலனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

‘ஸர்வேஸானபி அகாவதம் இதமேவ ஸூநிஷ்க்ருதி:
ஸாயிநாதேதி நாமோக்தி: யதஸ் தத்விஷயமைதி’ – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!