ஆடையாக செய்தித்தாளை வைத்து நடிகை செய்த அலங்கோலம்..!


நடிகை பயல் ராஜ்புட் செய்தித்தாளை ஆடையாக அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தபட்டதால், சினிமா, சீரியல் சூட்டிங் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இதனால் திரைப்பட ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல நடிகர்கள் உதவிகள் செய்தும் வருகிறார்கள். இந்த சமயத்தில் பிரபல நடிகை ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


‘ஏஞ்சல்’ படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது எல்லா நடிகைகளும் நடிகர்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் நடனமாடுதல், பாட்டு பாடுதல், சமைத்தல், உடற்பயிற்சி செய்தல் என பல விஷயங்களை செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை பாயல் ராஜ்புட் “பில்லோ சேலஞ்ச்” ஒன்றை அறிமுகப்படுத்தி பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார்.

இந்த நிலையில், இந்த நடிகை மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆடையை துணிச்சலாக அணிந்திருக்கிறார் நடிகை பாயல். இளம் நடிகையின் இந்த புதுமையான ஆடை உணர்வுக்கு ஒரு புறம் பாராட்டு கிடைத்தாலும் மறுபுறம் எதிர்ப்பும் அதிகமாக கிடைத்திருக்கிறது.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!