42 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… ஒரே நாளில் 2 ஆயிரம் பேர்… அதிர்ந்த அமெரிக்கா


அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 939 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது.

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த கொடிய வைரஸ் 24 லட்சத்து 80 ஆயிரத்து 165 பேருக்கு பரவியுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 63 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 763 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பரவியவர்களில் இதுவரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 248 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 370 பேர் பலியாகியுள்ளனர்.


சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 759 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 123 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 939 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!