முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணத்தில் அவரும் கலந்து கொண்டாரா?


கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணத்தில் அவரும் கலந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் திருமணம் கடந்த வாரம் எளிய முறையில் நடைபெற்றது. ஊரடங்கு சமயத்தில் திருமணம் நடைபெற்றதற்கு பலதரப்பட்ட கருத்துக்கள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன.

திருமண சர்ச்சைகளுடன் மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் தகவல்களில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் குமாரசாமி மகன் திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் எடியூரப்பா மணமக்களுடன் நிற்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளது.

வைரல் புகைப்படத்திற்கு, “பணம் படைத்தவர்கள் என்பதால் இங்கு ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றிணைந்து இருக்கின்றன. பசியால் செத்தாலும் ஏழை மக்கள் கட்டாயம் ஊரடங்கை பின்பற்ற வேண்டும்” எனும் தலைப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவை ஆய்வு செய்ததில் அது பிப்ரவரி 10 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற குமாரசாமி மகன் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது. அப்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் குமாரசாமி மகன் திருமணத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!