ரஜினிகாந்த் ரொம்ப நல்ல மனிதர்… அரசியல் நிலையை தெளிவாக சொல்லிவிட்டார்- பிரேமலதா


அரசியல் குறித்து தன்னுடைய நிலைபாட்டை ரஜினிகாந்த் தெளிவாக சொல்லி விட்டார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பூந்தமல்லியில் தே.மு.தி.க. நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் ரொம்ப நல்ல மனிதர். எங்கள் கட்சிக்கும் அவர் மீது மிக பெரிய மரியாதை இருக்கிறது. அரசியல் குறித்து தன்னுடைய நிலைபாட்டை அவர் தெளிவாக சொல்லி விட்டார். ஊடகங்கள் தான் இதனை பெரிதுபடுத்தி வருகின்றன.


இதனை நாம் பெரிது படுத்தக்கூடாது. இனிமேல் அவருடைய அரசியல் குறித்து கேள்வி கேட்காமல் தமிழக மக்களுக்கு தேவையான நலன்களில் நம்முடைய கவனத்தை செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்பது ரஜினிகாந்தின் தனிப்பட்ட கருத்து. வருகின்ற 2021 பொதுத்தேர்தலில் எல்லாவற்றுக்கும் நல்ல முடிவு வரும். சட்டமன்ற தேர்தலில் மாபெரும் மாற்றம் நிகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!