மனைவி, மகனை வெட்டிக்கொன்று ராணுவ வீரர் தற்கொலை… அதிர வைத்த காரணம்..!


கொல்லம் அருகே சொத்து தகராறில் மனைவி, மகனை வெட்டிக்கொன்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடைக்கல் அருகே உள்ளது வயனம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது 54). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி வசந்தகுமாரி (51). இவர்களது மகன் சுதீஷ் (30). வக்கீல்.

இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்தது. இது குறித்தான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை இவர்களது வீட்டில் தகராறு நடந்தது. அக்கம் பக்கத்தினர் இது வழக்கமாக நடக்கும் தகராறு தான் என்று இருந்துவிட்டனர்.

சிறிது நேரத்துக்கு பின்னர் சுதர்சனனின் நண்பர் அவரை பார்க்க வீட்டுக்கு வந்தார். வீட்டின் ஒரு அறையில் வசந்தகுமாரி வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த அவர் வெளியே ஓடி வந்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து கடைக்கல் போலீசில் புகார் செய்தனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!