விடுதி அறையில் குத்துச்சண்டை வீரர் தூக்குப்போட்டு சாவு


விளையாட்டு விடுதி அறையில் குத்துச்சண்டை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நாக்பூரை சேர்ந்தவர் பிரனவ் ராவத் (வயது19). குத்துச்சண்டை வீரர். கடந்த மாதம் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மராட்டியத்தின் சார்பில் கலந்துகொண்டார். இந்தநிலையில், மராட்டிய மாநிலம் அகோலாவில் நேற்று நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்பே அங்கு சென்று விளையாட்டு அகாடமி விடுதியில் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்றுமுன்தினம் உடல் நலக் குறைவை காரணம் காட்டி அவர் பயிற்சிக்கு வரவில்லை.

தற்கொலை

இந்தநிலையில், நேற்று காலை அவர் விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை மாநில விளையாட்டுத்துறை மந்திரி சுனில் கேதார் உறுதிப்படுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!