இளைஞரின் தலையை துண்டித்துக்கொலை செய்த கும்பல்..! அதிர வைத்த காரணம்..!


நாகை பாரதி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஆட்டு பக்கிரி மகன் மதியழகன் (வயது24). நாகை காடம்பாடி சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் சரண்ராஜ் (26), தாமரைக் குளம் தென்கரை பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் விஜய் என்ற அப்துல்காதர் (23), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மாரியப்பன் (26), பாப்பாகோவில் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சிவா (24), ஜெயராமன். இவர்கள் 6 பேரும் நண்பர்கள்.

இந்த நிலையில் சரண்ராஜ், விஜய் என்ற அப்துல்காதர், மாரியப்பன், சிவா, ஜெயராமன் ஆகிய 5 பேரும் கடந்த மாதம் 31-ந்தேதி இரவு நாகை பாப்பான் சுடுகாடு பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த மதியழகன் என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் மது அருந்துகிறீர்களா என்று கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மதியழகன் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ஜெயராமனை குத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து அவர்கள் வைத்திருந்த அரிவாளால் மதியழகனை வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பின்னர் மதியழகனின் தலையை தனியாக வெட்டி எடுத்து உடலையும், தலையையும் அருகில் சாக்கடை ஓரத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். மதியழகனை கொலை செய்தது குறித்து 5 பேரும் மற்ற நண்பர்களிடம் கூறி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து சரண்ராஜ், விஜய் என்ற அப்துல்காதர், மாரியப்பன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மதியழகனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று மதியழகனை புதைத்த இடத்திற்கு 4 பேரையும் போலீசார் அழைத்து சென்று உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதியழகனின் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஜெயராமனை வலைவீசி தேடி வருகின்றனர்.-Source: Vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!